Wednesday, November 16, 2016

மற(று)க்க முடியுமா?

மற(று)க்க முடியுமா?

மற(று)க்க முடியுமா?
-------------------------------------
அரசாங்கப் பள்ளியிலே படிச்சாரு அப்துல் கலாம்!
கார்ப்பரேட்டு பள்ளிக்குத்தான் வச்சாரே நூறு சலாம்!
ஏவுகனை ஏவி சா(சோ)தனையில் விண்ணைத்தான் தொட்டாரு!
அமைதிக்கு கொள்ளி வைக்க அக்னிய ஏவித்தான் விட்டாரு!

கனவு, எங்களக் காணச் சொல்லித் தூக்கத்தைப் பறிச்சாரு!
வல்லரச வக்கனையா பேசிபேசி பொழச்சாரு!
தமிழுன்னு பேசி பேசி தம்பட்டம் அடிச்சாரு!
தமிழுல நேரடியா எத்தனை எழுதி கிழிச்சாரு!?

நேத்தாஜி இராணுவத்தில் ஜான்சி ராணி யாருங்க...
கேப்டன் லட்சுமி சேகல் பெண்மணி பாருங்க!
அவர ஜனாதிபதி தேர்தலிலே தோற்கடிச்சது ஏனுங்க?
காரணம் காங்கிரசு பா.ஜ.க அம்பு அப்துல் கலாம் தானுங்க!

ஜனாதிபதி ஆன அப்துல் கலாம் அண்ணாச்சி...
கருணை மனு மீதான கையெழுத்து என்னாச்சி?
மீனவ கிராமத்துல ஒருவராக பிறந்தீங்க
மீனவன் செத்தாக்கூட அறிக்கை விட மற(று)ந்(த்)தீங்க!?

விதை ஒன்னு போட்டாக்கா செடி ஒன்னு முளைக்குமா ?
ஏவுகனை பறந்தாக்க எங்க பசி பறக்குமா?
அணு உலை வச்சாக்க எங்க உலை கொதிக்குமா ?
வல்லரசு ஆனா எங்க வயிருதான் நிரம்புமா ?

எம்மால் மறக்கத்தான் முடியுமா?
உம்மால் மறுக்கத்தான் முடியுமா?
அணு விஞ்ஞானி இல்லாட்டியும் நீ அணு உலைக்கு கேரண்டி போட்டத...
எங்க உசுருக்கு உ(வி)லைநீ வச்சத... அணு உலை நீ வச்சத!

ஏவுகனை நாயகனா உன்னைக்  கொண்டாடுது  இந்த ஊரு!
நாயகன் நீ இல்ல வில்லன்னு தெரியவரும் ஒரு நாளு!
கொஞ்சம் கதிர் வீச்சு கசிஞ்சா போதும்...
நாறிடும் உன் பேரு!
நாறிடும் உன் பேரு!!

                            - டுவிட்டூ பாண்டூ.

அஜித் பிறந்த நாள் பரிசு

அஜித் பிறந்த நாள் பரிசு

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு...

அஜித்திற்காக... பிறந்த நாள் பரிசாய்
கதாநாயகன் அறிமுகப் பாடல்
(Hero Entry Song)
****

பல்லவி:

தீயாத தனல் நான்!
காயாத புனல் நான்!
ஓயாத அலை நான்!
சாயாத 'தல' நான்!

ஈயாத கரங்கள்
இருந்தென்ன லாபம்!
பாயாத நதிகள்
பட்டுத்தான் போகும்!

சரணம் :

துயர்கண்டு துடிக்கும்
நெஞ்சம்தான் எனக்கு!
உன்நெஞ்சும் துடித்தால்
நண்பன்நான் உனக்கு!

தயக்கங்கள் ஒதுக்கு;
தரணியை செதுக்கு;
மயக்கங்கள் தவிர்த்தால்...
மகுடம்தான் நமக்கு!

கயவரைக் கண்டால்
அடித்தேநீ நொறுக்கு!
சுயநலப் பேயை
சுட்டேநீ பொசுக்கு!

பயமின்றி புகுந்து
பட்டைய கிளப்பு!
ஜெயமென்றும் ஜெயமே
சரிதத்தை நிரப்பு!!

 - பாடலாசிரியர் ஞானகுரு,
- தமிழ்த் திரைப்பாக்கூடம்,
  - 8807955508.

அப்பா

அப்பா

அப்பா
--------------

மாதா பிதா குரு தெய்வம்.
பிதாதான் முதல்குரு.
இரண்டாம்தாய்.

உறவுகளைஅறிமுகம் செய்பவள் தாய்.
உலகத்தை அறிமுகம் செய்பவர் தந்தை.

கருவறையில் பத்து மாதங்கள்
வலியோடு சுமப்பவள் அம்மா.
அம்மாவையும் சேர்த்து
புன்னகையோடு நெஞ்சில் சுமப்பவர் அப்பா.

அன்னை மடியில் சுமந்ததை விட,
அப்பா தோளிலும் மாரிலும் சுமந்ததுதான்அதிகம்.

பாசம் என்கிற நாணயத்தின்,
பூ அம்மாவின் அன்பு  என்றால்,
தலை அப்பாவின் கோபம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருப்பாளா தெரியாது.
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக அவளது அப்பா இருப்பார்.

தவமாய் தவமிருந்து வரங்களை எல்லாம்
அம்மாவுக்கும் பிள்ளைககளுக்கும் வழங்குவதற்காகவே
எப்போதும் சபிக்கப்பட்டவராய்
வலம் வருபவர் அப்பா.

தியாகத்திற்கும் போற்றுதலுக்கும்
அம்மாவுக்கு கிடைக்கும் பெயரில்
பத்தில் ஒரு பங்குகூட
இந்த அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை.

எது‍வென்றாலும் அம்மாவிடமே
கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நமக்கு
கேட்காமலே கொடுக்கும் அப்பாவிடம்
கேட்பதற்கு எதுவுமில்லைதான்.

முகப்பூச்சுகளாலும்  வாசனை திரவியங்களாலும்
மூடிக் கொள்ளும் நமக்கு
எட்டுவதே இல்லை
அப்பாவின் வியர்வை வாசனை..

பாவம்
அழும் சுதந்திரம்கூட
அப்பாவுக்குஇல்லை.

அன்னையர் தினம். குழந்தைகள் தினம்
இந்த வரிசையில் ஏன் இல்லை
தந்தையர் தினம்.
ஓ... இருக்கிறதா
தியாகியர் தினம்.

விடியலுக்காய் பாடுபட்டு
அந்த விடியல்வெளிச்சத்தில்
காணாமல் போகும் வெண்ணிலா தியாகியே
இந்த அப்பா.

நமது கனவுக்காக
தன் தூக்கம் தொலைத்தவர் அப்பா.

நமது நிழலுக்ககாக
வெயிலில் உழன்றவர் அப்பா.
நாம் வசதியாய் வாழ
கடன்பட்டவர் அப்பா.
நாம் சீரும் சிறப்புமாய் வாழ
சீர குலைந்தவர்அப்பா.

அப்பா
உன்னை விட என் உயரம் கம்மிதான்.
ஆனாலும் நீகாணாத உயரங்களை
நான் காண்கிறேன்.

ஆம் உன் தோளில் அல்லவா.
என்னை ஏற்றி வைத்திருக்கிறாய்.
.
சிரித்தால் சிரிக்கும்
அழுதால் அழும்
கண்ணாடி நீ
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று
நான் கண்ணாடி பார்ப்பதில்லை.
உன்னைப் பார்த்தாலே போதும்.

எத்தனைஅப்பாக்கள்...
வீட்டைச் சொர்க்கமாக்க
அயல்நாட்டு நரகத்தில்
இளமையை இழந்தனரோ?

எத்தனைஅப்பாக்கள்...
,வீட்டை வண்ணமாக்க
மேனி கருத்தனரோ?'

எத்தனை அப்பாக்கள்
பொன்னகை செய்ய
புன்னகையை அடமானம். வைத்தனரோ?

அவர் சம்பாத்தியத்தில்
அவருக்கென எதுவும் செய்யாதவரின் பெயரே அப்பா..

அவர் பாக்கட்டில் பணம் வைத்திருப்பதே
நமது பாக்கெட் மணிக்காகத்தான்.

நம்மைச் சுமந்து உலகம் சுற்றிக்காட்டி..
செருப்பாய் தேய்வதால் தானோ
வாசலோடு கழட்டிவிடத் துடிக்கிறோம்.
ஒன்று
அவரை விட்டுவிட்டு வெளிநாடு பறந்து விடுகிறோம்.
இல்லை
முதியோர் இல்லத்தில் அடைத்துவிடுகிறோம்.

நெஞ்சில் சுமந்தவருக்கு,
வீட்டில் இடமில்லை...
இதுவா மகன்
அவயத்தில் முந்தியிருக்கச் செய்த
தந்தைக் காற்றும் உதவி?

அப்பாவை வயசில்தான் புரிந்து கொள்ளவில்லை.
அப்பாவான பிறகாவது புரிந்து கொள்.

வயதானஅப்பாவை  ஒதுக்கி வைக்கும் நீ
பாவம் மறந்து விடுகிறாய்..
நீயும் அப்பாவென்று.
உனக்கும் வயதாகிறது என்று.

              - டுவிட்டூ பாண்டூ.

               - 98436 10020

மே தினப் பாடல்

மே தினப் பாடல்

மே தினப் பாடல்
---------------------------
பாடல் : ஞானகுரு
செல் :  88079-55508
இசை : யவனராஜன்
செல் : 99625-64218

பல்லவி :

உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!


வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!

பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!

வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள்  ஆக்க'மே'!


 சரணம் 1:

பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!

பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!

தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!

ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில்  ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!


 சரணம் 2 :

விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!

நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!

உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?

விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?

பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!

பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!


 சரணம் 3:

யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!

யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!

யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!

யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!

படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!

எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!

தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!

காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!

தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!

உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!

வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
       - பாடலாசிரியன் ஞானகுரு.
       - 8807955508.
நன்றி: www.kavithai.com

நூல் அறிமுகம் - எட்டுக் காலியும் இருகாலியும் - செந்தில் பாலாஜி

நூல் அறிமுகம் - எட்டுக் காலியும் இருகாலியும் - செந்தில் பாலாஜி

கந்தகக் கவி பாண்டு  எழுதிய -எட்டுக்காலியும் , இரு காலியும் :
கவிதைத்தொகுப்பு
------------      ------------
நூல் அறிமுகம்- செந்தில் பாலாஜி- பொள்ளாச்சி
==== ==========  ===============    =============

  "நகை , அழுகை கோபம் , வெகுளி என உணர்வுகள் நிறைந்த வாழ்வு இது . ஆம் , அழகான உணர்வுகள் அழகான வாழ்வியலை தரும் . ஆழமான உணர்வுகள் அழகான வாழ்வியலை உருவாக்கும்.

   பழந் தமிழர்களின் ஆழமான உணர்வுகளில் முத்தமிழான இயல் , இசை  நாடகம் மூன்றும் உதிரம் கலந்து இருந்தது. ஆதித் தமிழர்கள் ஆயக்கலைகள் "64" லும் தேர்ச்சி பெற்றோரும் உண்டு, இயற்கையே கடவுளென எண்ணி அந்த இயற்கைக்கு நிகரான பரதக் கலை கற்காமல் நின்ற ராஜ சேகர பாண்டிய மன்னனும் உண்டு.

 இயற்கையும் , தமிழர்களும் பிணைந்து வாழ்ந்த காலங்கள் மருவி நின்று தற்சமயம் , செண்டை மேளமும் , நவீன இசை கருவிகளுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தையும் "பறை இசை" அழிந்து  வரும் நவீன கால சூழலை முதல் கவிதையில் கூறுகிறார், கந்தக கவி பாண்டு .

  இன்று சென்னையின் முக்கிய பகுதியான "Parrys Corner" ஆதி காலத்தில் "பறையர் முக்கு " என்று அழைக்கப்பட்டதே ஆகும். அதாவது பறை இசை தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதி.

  தொகுப்பின் தலைப்பு சற்று வித்யாசமாய் , கவிதைகளை படிக்கும் போது  மட்டுமே உணர முடிந்தது தலைப்பின் தனி சிறப்பை.

  பூமியினில் , எத்தனையோ விச ஜந்துக்கள் இருக்க, தன்  சுய உழைப்பினால் சுவற்றின் ஒரு மூலையில் தான் கட்டிய கூட்டை  களைந்து விஷமச் சிரிப்புகளை பார்க்கும் ஒரு எட்டுக்கால்  சிலந்தி பூச்சிக்கும்  -  ஒடுக்கப்பட்டவர்கள் என ஓரம் கட்டி, சமூகத்தில் சீர்குலைக்கப்பட்டு , விஷமச் சிரிப்புகளை வேடிக்கை பார்க்கும் அப்பாவி இரு கால் மனிதனுக்கும் , தனது  கவிதைகளில் நிறையவே போராடி இருக்கிறார், கவிஞர் .

   மனிதன் மனித வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட மிருகம் என்பதனை , வன விலங்குகள் மனிதன் மனிதனா என்பதை விவாதிப்பது போன்ற கவிதையின் முடியில் " மனிதன் மனிதனென" வாதம் தோற்பது சமூகத்தின் பிம்பங்கள்.

  ஜாதி வெறி பிடித்த சமூகத்தில் - மண்ணுக்குள் இன்னும் மக்காமல் இருக்கும் நேற்று கொல்லப்பட்ட சங்கரின் சதைமூட்டையும், நேற்று முன் தினங்களில் கொல்லப்பட்ட கோகுல் ராஜ் மற்றும் இளவரசன் ஆகியோரின் சதைமூட்டைகளும் வேடர்கள் உண்பதற்காக இன்னும் மக்காமல் மண்ணுக்குள் இருக்கிறது என்னும் செய்தியை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பெண்களின் அடிமை நிலை மாற நிறைய சாவிகளை  கொடுத்துள்ளார்.

நாயிடம் கடி வாங்கிய பைத்தியங்களும் , பைத்தியங்களிடம் கல் அடி வாங்கிய நாயும் பேசி கொள்வது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது.

   இரவை எதிர்த்துப் போராடிய வெண்ணிலாவிற்கு  மகுடம் சூட்ட நினைப்பது நியாயம்.

  காதலை பல கோணங்களில் எழுதி தீர்த்துவிட்ட கவிதைகளுள் ,

 " வந்து வந்து
   வம்பிழுக்கும்
   அண்ணனின் அடாவடியும்
   காதல் ....

   ஏட்டிக்கு போட்டியாய்
   தம்பி அடம்பிடிப்பதும்
   காதல் ....

   நம்மீது அடி விழ
   தங்கை அழுவதும்
   காதல் ....

   யாதும் ஊரே .
   யாவரும் கேளிர் என
   பற்றி படர்ந்து
   விரியும் மனிதமே
   காதலென ...!
 சீர் திருத்துகிறார்.

     இன்னும் ஏன், கரணம் போட்டும், கயிறு நடை போட்டும் , கண்ணாடி பாட்டில் களை  வயிறு வரை விட்டு வித்தை செய்து பிழைக்கும்  வித்தை காரர்கள் மத்தியில் வாகனத்தை வேகமாய் ஒட்டி நீ ஏன் வித்தை செய்கிறாய் என்று ஒரு கவிதையில் கேட்கிறார்.

 அக்கா மகளும் அத்தை மகளும் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் துணை என்பது புன்னகை .

  எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளும் , ஈழத்தின் மண் வாசமும் புலிக்கொடியும் - வீரம் .

  குழைந்தைகள் திட்ட வேண்டாம் என்று சொல்லி , குழைந்தைகள் செய்யும் குறும்புத்தனம் மற்றும் கேளிக்கைகளுக்கு தக்க நேர்மறை எண்ணங்களை பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்து வருங்கால இந்தியாவை வல்லரசு ஆக்க முயற்சி  எடுத்திருக்கிறார்.

  சரித்திர தேர்ச்சி கொண்டு , சரித்திரத்தில் இடம் பிடி என்கிற ஊக்குவிப்பில் , எனது கண்மயிர்களுக்குள் ரத்தம் பாய்கின்றது.

  கவிதை தொகுப்பை படித்து முடித்தவுடன் , அதற்குள் முடிந்து விட்டதா என்கிற ஏக்கம் தொற்றிக்கொள்ள .,

ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் , வீட்டிற்கும், நாட்டிற்க்கும், உலகிற்கும் , இந்த படைப்பு உயித்தலுக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தலை சிறந்த  படைப்புக்கு ஏன் விருதுகள் கொடுத்து கௌரவிக்க கூடாது என்பது எனது ஆசை.

மகிழ்ச்சியுடன்
செந்தில்பாலாஜி
9976563769
https://www.facebook.com/pollachitms
நன்றி: தமுஎகச பொள்ளாச்சி

கயல் குட்டி

கயல் குட்டி


- பல்லவி -

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வெள்ளை சிரிப்புல கொள்ளை அடிக்குற...
கொள்ளை அழகுல உள்ளம் பறிக்கிற...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

கதிர் ஒளியினைத் தட்டி எழுப்பிட...
கடல் அலையினை எத்தி உதைத்திட...
மணற் கரையினில் நண்டு பிடித்திட...
மன வெளியினில் இன்பம் பெருகிட...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் -1 -

இருகை நீட்டி என்னை அழைத்தாய்...
நான் குழந்தையாக ஆசிர்வதித்தாய்!
மொத்த வானத்தை பார்வையில் மறைத்தாய்!
மழலை மொழியில்  மெல்லிசை வடித்தாய்!

உன்னை நான்தான் சுமந்தேனோ...
என்னை நீதான் சுமந்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் - 2 -

ஒரு கன்னம் காட்ட முத்தம் வைத்தால்...
மறு கன்னம் காட்டி ஏங்கி நிற்பேன்!
வீட்டுச் சுவற்றினில் பாடம் நடத்திநீ
என்னை அதட்ட நானும் ரசிப்பேன்!
உன்னை நான்தான் படைத்தேனோ...
என்னை நீதான் படைத்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

     - பாடலாசிரியர் பாண்டூ.

உனைக் கண்ட நாள் முதல்

உனைக் கண்ட நாள் முதல்


ஆண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடி!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடி!

தீட்டிவச்ச அருவா ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடி!
வெட்டபட்ட தலை ஒன்னு...
தண்ட வாளத்துல ஓடுதடி!

கடை வீதியில நடந்தாக்க...
தொடை ரெண்டும் நடுங்குதடி!
எவன்எப்ப குத்துவானோ...
என் உசுரு  துடிதுடிக்குதடி!

பெண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடா!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடா!

ஆசீட்வச்ச முட்டை ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடா!
வெந்துபோன முகம் ஒன்ன...
கண்ணாடியும் காட்டுதடா!

பஸ்ஏறி பயணம் போனாக்க
உடலெல்லாம் உதறுதடா!
எவன் என்னை சிதைப்பானோ
என் உசுரெல்லாம் பதறுதடா!!
                                     - பாண்டூ.
                                  -9843610020.